a
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வின் முடிவு இன்று காலை 10. 30க்கு வெளியிடப்பட்டது.
மொத்தம் 91.4 சதவிகித மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  மாணவிகள் 94.1 சதவிகிதமும் மாணவர்கள் 87.9 சதவிகிதமும் பெற்றிருக்கிறார்கள்.
மாநிலத்திலேயே முதல் இடம்  பிடித்தவர் ஆர்த்தி. இவர் 1195 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.  இரண்டாம் இடம் பிடித்த  பவித்ரா 1194 மதிப்பெண் பெற்றிருக்கிறார். மூன்றாம் இடம் பிடித்த வேணு ப்ரிதா 1193 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.