சென்னை: நாளை முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடத்தப்பட்டது.  8,32,475 பேர்  எழுதிய இந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.

விடைத்தாள் நகல் வழங்குவது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதிகளை பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. இந் நிலையில், நாளை பிற்பகல் 3 மணி முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:  +1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பித்த மாணவர்கள்  https://dge.tn.gov.in/  என்ற இணையத்தில் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.