சென்னை:

ரெயில் டிக்கெட் கட்டணத்தில்  வழக்கறிஞர்களுக்கு 75% தள்ளுபடி கேட்டு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் வழக்கு நிமித்தமாக பல மாநில நீதிமன்றங்களுக்கு பயணம் செய்யும் வழக்கறி ஞர்களுக்கு ரெயில் பயண டிக்கெட் கட்டணத்தில் 75 சதவிகிதம் அளவுக்கு  சலுகை வழங்க உத்தரவிட வேண்டுமென மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த கோரிக்கை மனுவை சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சையது கலீஷா தாக்கல் செய்தி ருந்தார். அதில், மாற்று திறனாளிகள், மூத்த குடிமக்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு கட்டணச் சலுகை அளிப்பதுபோல வழக்கறிஞர்களுக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்று  கோரியிருந்தார்,.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.