துராந்தகம்

ருளர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொலை மிரட்டல் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுராந்தகம் அருகே உள்ள காவத்தூர் சிற்றூரைச் சேர்ந்த முருகன் மற்றும் அவர் மனைவி தேவி ஆகியோர் இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.   இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் மகள்கள் என 4 குழந்தைகள் உள்ளனர்.   இவர்கள் நேற்று இரவு உணவு அருந்தி விட்டு உறங்க சென்ற போது தேவியின் அருகே  யாரோ படுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

தேவி கூச்சலிட்டதால் முருகன் மொபைல் லைட்டை அடித்துப் பார்த்த போது அதே ஊரைச் சேர்ந்த சுந்தரேசன் அங்கிருந்தது தெரிய வந்துள்ளது.   உடனடியாக சுந்தரேசன் சுதாரித்துக் கொண்டு முருகனையும் தேவியையும் தேவியையும் ஆபாசமாகத் திட்டி உள்ளார்.  மேலும் இது குறித்து வெளியே சொன்னால் அந்த குடிசைகளைக் கொளுத்தி அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டி விட்டுத் தப்பியுள்ளார்.

தேவியும் முருகனும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.  இந்த புகாரின் அடிப்படையில் சித்தமூர் காவல்நிலைய ஆய்வாளர் அமல்ராஜ் தலைமறைவாக இருந்த சுந்தரேசனைக் கைது செய்துள்ளார்.  அவர் மீது சாதிய வன்கொடுமை, பாலியல் சீண்டல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.