சென்னை:
முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஊரடங்கு நாளன்று திருமணத்திற்கு செல்பவர்கள் அழைப்பிதழ் காண்பித்து பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.