புதுச்சேரி: பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்துமாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 96.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் நிறுவனரும், தந்தை பெரியாரின் முதன்மை தளபதியுமான வே.ஆனைமுத்து, வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வே.ஆனைமுத்து, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க காரணமாக இருந்த மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வைத்ததிலும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமா உயர்த்தச் செய்ததிலும் மிகப்பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளார்.

பெரியாரியத்தோடு, மார்க்சியத்தையும், அம்பேத்கரியத்தையும் இணைத்து, இளைஞர்களியே பரப்பியவர்,  சமூக நீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அவரது மறைவு பேரிழப்பாக கருதப்படுகிறது.