தமிழகத்தில் புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக நடைபெற்ற சிறப்பு குறை தீர்ப்பு திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “குறைதீர்ப்பு திட்டத்தில் பலர் மனைக்கான பட்டா மற்றும் பட்டா மாறுதல் கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளனர். தகுதி வாய்ந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படும். உடலுக்கு உயிர் முக்கியமானது போல, விவசாயிகளுக்கு நீர் மிகவும் முக்கியமானது. கண்ணுக்கு இமை போல விவசாயிகள் நீர் நிலைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை நீர் வீணாகுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2019 – 2020ம் ஆண்டு, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,829 நீர் நிலைகளில் குடிமராமத்து பணிகள் தொடங்கி உள்ளது.

முதியோர் ஓய்வூதியத்திற்கான மனுக்கள் அதிகம் வந்துள்ளது. புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பட்டா இருந்தும் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி” என்று தெரிவித்தார்.