அரசியலில் கவனம் செலுத்தத் திரையுலகிலிருந்து விலகினார் பவன் கல்யாண். ஆனால், அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கிறார் .

அதேபோல் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் 27-வது படத்தை க்ரிஷ் இயக்கி வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தின் முன்னோட்டம் இன்று (செப்டம்பர் 2) வெளியிடப்பட்டது.