மும்பை:  மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்மீதான பத்ரா சால் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது காவல்  ஆகஸ்டு 22 வரை நீட்டிப்பு  செய்து நீதின்றம் உத்தரவிட்டு உள்ளது.

மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சிவசேனா எம்.பி. சஞ்சாய் ராவத்மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,  சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்திய, கடந்த 1-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் ராவத்தின் காவல் 2வது முறையாக ஆகஸ்ட் 22-ம் தேதி வரை   நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் சஞ்சாய் ராவத்தின் உடல்நிலையை கருத்திக்கொண்டு அவருக்கு வீட்டு உணவு மற்றும் மருந்து வழங்க வேண்டும் என்ற சஞ்சயின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவருக்கு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் படுக்கை வசதி குறித்த அவரது வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.