மும்பை:
சியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ள நிலையில் பும்ரா, ஹர்ஷல் படேல் காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளனர். சூர்யகுமார், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், சஹால், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.