டெல்லி: இந்தியாவில் நேற்று  ஒரே நாளில் புதிதாக மேலும் 12,751 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், 42 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியை தாண்டியது.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று  புதிதாக மேலும்  12,751 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,41,74,650ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 42 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,772ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 16,412 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,35,16,071 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாட முழுவதும் 131807 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை  2,06,88,49,775 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 31,95,034 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.