டி-20 உலகக்கோப்பை போட்டி முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

மிட்செல் 53 ரன்களும் வில்லியம்சன் 46 ரன்களும் எடுத்தனர்.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முஹம்மத் ரிஸ்வான் 57 ரன்களும் பாபர் அசாம் 53 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்தியா – இங்கிலாந்து இடையே நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாட இருக்கிறது.