இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் இந்தியா முழுவதும் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது 74 போட்டிகள் நடைபெறும் நிலையில் இதன் எண்ணிக்கையை 94 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் அதிகரிக்க உள்ள இந்த எண்ணிக்கை 2025 ம் ஆண்டு 84 போட்டிகளாக அதிகரிக்கப்படும்.

பின்னர் 2027 ம் ஆண்டு முதல் 94 போட்டிகள் கொண்ட தொடராக ஐ.பி.எல் போட்டிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மாதக்கணக்கில் நடந்து வரும் ஐபிஎல் தொடர் போட்டி எண்ணிக்கை அதிகரித்த பின் மேலும் சில மாதங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் இந்திய அணி பங்குபெறும் சர்வதேச போட்டிகளின் நிலை என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.