சென்னை,

த்மவிபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.

நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர்  இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது.

இசைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

1000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்தும், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள மேஸ்ட்ரோ இளைய ராஜாவுக்கு இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருக்கு உலக தமிழர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரையுலகை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் உள்பட அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  விசிக தலைவர் திருமாவளவன்,  இளையராஜாவை இன்று நேரில் சந்தித்து, பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வானதற்காக வாழ்த்து தெரிவித்ததார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய திருமா,  தன் இசையால் நம் அனைவரின் மனங்களை வென்ற இளையராஜா விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.