சென்னை,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டமன்றத்தை கூட்டி எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

ஜெ.மறைவை தொடர்ந்து உடைந்த அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் தற்போது இணைந்து ஒரே அணியாக உள்ளது. டிடிவி தினகரன்  தலைமையில் 19 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் நேற்று கவர்னர் வித்யா சாகர்ராவை சந்தித்து, எடப்பாடிக்கு தாங்கள் கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கடிதம் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலி னும், தமிழக அரசு  உடனடியாக நம்பிக்கைக் கோரும் வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்திரவிட வேண்டும். அதற்குரிய வகையில் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குழு தலைவர் ராமசாமி, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என அனைவருக்கும் தெரியும் எனவும், மைனாரிட்டி அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுவதில் எந்த நியாயமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் எனவும், மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.