சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மனைவி மரணம் அடைந்தது குறித்து தகவல் அறிந்த  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் திருமதி. விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது  மறைவு செய்து அறிந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  நேரில் சென்று ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறி, அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தமது துணைவியாரை இழந்து வாடும் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.