சென்னை

முன்னாள் முதல்வர் ஓ பி  எஸ் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர உள்ளதாக தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய நிலையில், பா.ஜ.க.வுடன் தான் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். பிரதமர் மோடி தமிழகத்தில் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தார். திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பா.ஜ.க.கூட்டணியில் இருப்பதாகக் கூறி வரும் ஓ பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு இல்லை என்பதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் ஓ.பன்னீர் செல்வம் அவரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். இந்த முறை, கூட்டணி தலைவர்கள் எல்லோரும் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்காதது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் ஓ பன்னீர் செல்வம்,

”நாங்கள் பாஜகவுடன்தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம். மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ள நாங்கள். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உறுதியாக உள்ளது. எனவே இரட்டை இலை சின்னத்தை கேட்டுத் தேர்தல் ஆணையத்தை நாட உள்ளோம் ” 

எனக் கூறியுள்ளார்.