சென்னை

ன்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன்  ஓ பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த அண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக-அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதிமுக வில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணிக்கிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் எடப்பாடிக்குக் கட்சிக்குள் ஆதரவு அதிகம் உள்ளது.

இன்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாகவும் நாடாளுமன்ற தேர்தலில் என்ன நிலைப்பாடு, யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.