சென்னை:

ன்னை சந்தித்த அதிமுக எம்எல்ஏ பிரபு ஸ்லிப்பர் செல் அல்ல என்றும், முதல்வர் பதவி கிடைக்காததால் ஓபிஎஸ் விரக்தியில் இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

இன்று காலை கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு டிடிவி தினகரனை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்தார். மேலும், அனைத்து எம்எல்ஏக்களும் டிடிவி அணிக்கு வர வேண்டும் என்றும், மக்கள் ஆதரவு டிடிவிக்குத்தான் உள்ளது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  ஈபிஎஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனதால், முதல்வர் பதவியை ஓபிஎஸ் கேட்டு வருவதாக கூறினார்.

பிரதமர் மோடி கூறியதால் துணைமுதல்வர் பதவி ஏற்றதாக ஓபிஎஸ் கூறியுள்ளது அவரது விரக்தியை காட்டுவதாக கூறிய டிடிவி,  அவர் முதல்வர் பதவி கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர்களின் பிரபு ஸ்லிப்பர் செல்லா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,   பிரபு ஸ்லீப்பர்செல் அல்ல என்றும்,  தனது ஸ்லிப்பர் செல்கள்  அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது மட்டுமே வெளிப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணைமுதல்வர் ஓபிஎஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, மோடி கூறியதன் பேரிலேயே தான் துணைமுதல்வர் பதவி ஏற்றதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.