சென்னை,

சிகலா குறித்து தமிழக முதல்வர் ஓபிஎஸ் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோரின் பேட்டி அடிப்படையில் சசிகலா மீது வழக்கு பதிய வேண்டும் என டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளது மற்றும் ஜெயலிலிதாவின் மரணம் குறித்தும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதிரடியாக பேட்டி அளித்தார். மேலும், ஜெயலலிதா சிகிச்சை குறித்து மருத்துவர் பீலே அளித்த பேட்டி, செட்டப் செய்யப்பட்ட பேட்டி என்றும், தன்னை மருத்துவமனைக்குள் சென்று ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

அதேபோல, தமிழக முதல்வர் ஓபிஎஸ்சும், சசிகலா குடும்பத்தினர் என்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்று அதிரடியாக பேட்டி அளித்தார்.

இதையெல்லாம் குறித்து சசிகலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த  வேண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக  நீதிபதி மகாதேவன் தெரிவித்தார்.