அ.தி.மு.க. சட்டமன்ற கூட்டத்துக்கு வந்திருந்த எம்.எல்.ஏ. ஒருவர், “உடல் நலமில்லை” என்று சொல்லி எஸ்கேப் ஆனதால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து அவரை கட்சி பொருளாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கினார்.

மேலும் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தையும் கூட்டினார். கூட்டத்துக்கு வந்த எம்.எல்.ஏக்களில், ஒருவர் மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர். சிறிது நேரம் கூட்டத்தில் அமர்ந்திருந்த சந்திரசேகர், திடீரென நெஞ்சு படபடப்பாக இருப்பதாக சொல்லி, பக்கத்தில் மருத்துவரை பார்த்துவிட்டு சற்று நேரத்தில் வருவதாகச் சொல்லி கிளம்பினார். ஆனால் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. அவரது செல்போனும் அணைத்துவைக்கப்பட்டுள்ளது. இதனால் சசிகலா தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.