ஊட்டி

மீண்டும் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் இம்மாத தொடக்கம் முதலே தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்தது. இதில் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்தது.

எனவே மலை ரயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது.  பிறகு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது. ஆயினும் மீண்டும் பெய்த மழையால் கில் குரோவ் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்தது.

இங்குச் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் போக்குவரத்து கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த பணிகள் தற்போது முடிந்து தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் ஊட்டீ  மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.