சென்னை: தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் சுமார் 7 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதாக கூறி, உச்சநீதி மன்றம் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகள் தயாரித்து வெடிக்கலாம் என்றும், அதற்கும் நிபந்தனைகளையும் அறிவித்து உள்ளது. மாசு காரணமாக சில மாநிலங்கள் முழுமையாக பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாசும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து மேல்முறையீடு செய்தும் அதை கண்டுகொள்ளாதா உச்சநீதி மன்றம் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது.

அதன்படி,  தீபாவளி அன்று காலை 6-7 மணி வரை ஒரு மணி நேரமும்,  இரவு 7-8 மணி வரை மேலும் ஒரு மணி நேரம் என மொத்தம் 2மணி நேரம் மட்டுமே  பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான்  மக்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், அதில் மண்ணை போட்டுள்ளது உச்சநீதி மன்றம்.