சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் மரம் வேரோடு சாய்ந்துவிழுந்தது. இதில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் சிக்கி மரணம் அடைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம்  முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில்  முதல்வரின் தனிப்பிரிவு அருகே  இருந்த பெரிய மரம், மழை மற்றும் காற்றால் சாய்ந்து விழுந்தது. இதில், அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உள்பட 2 கார்களும் சேதடைந்தனர். இந்த விபத்தில், ஒரு போக்குவரத்து காவலர் காயமடைந்த நிலையில், பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் காவலர் பெயர் கவிதா என்பதும், அரக்கோணத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.