ராமநாதபுரம்

வேறு ஒரு ஓ பன்னீர் செல்வமும் ராமநாதபுரத்தில் இருந்து போட்டியிட உள்ளார். 

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தி ல் போட்டியிடுகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

மேலும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.i