திருவண்ணாமலை:  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து,, டிசம்பர் 6, 7ந்தேதிகளில் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துதுறை தெரிவித்து உள்து.

உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில்  கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, வரும் 27ந்தேதி கொடியேறுகிறது.  தீபத்திருவிழாவையொட்டி, 2,692 சிறப்பு பஸ்கள் 14 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

10 நாட்கள் நடைபெறும்  தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபம் அன்று  காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன் மாலையில் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரையில்  மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

நடப்பாண்டு கார்த்திகை தீபத்திருவிழா  நவம்பர்  27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ந்தேதி தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.

தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு, 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிற்து.

பக்தர்களின் வசதிக்காக  தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து, கோவில் வரை பக்தர்கள் வர, 100 பஸ்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டஉள்ளது.

தீபத்திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான மகாதீபம், பவுர்ணமி நாளை முன்னிட்டு, 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது, ஒன்பது ரயில்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் நிலையில், மேலும் 14 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 பிரதான சாலைகளில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

12,400 கார்களை நிறுத்தும் இட வசதியுடன் 59 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு பணியில் ஆயிரம் மாணவர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுவார்கள்.

கோயில் பிரகாரங்களில் 169 கண்காணிப்பு கேமராக்களும், கிரிவலப்பாதையில் 9 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, 4 கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்கப்படும்.

முக்கிய இடங்களில் 57 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.

மகாதீபம் ஏற்றப்படும் மலைமீது இந்த ஆண்டு 2,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.