சென்னை: தொடர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன்,  பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் முழு உடல் பரிசோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வரும் கமல்ஹாசன், தனது நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், ணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பது உள்பட பல்வேறு படங்களிலும் நடித்து வருகிறார்.

தொடர் பணி, அலைச்சல் காரணமாக கமலுக்கு காய்ச்சல், சளி வந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. இதையடுத்து, அவர்  சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முழு  உடல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ அறிக்கையைத்தொடர்ந்தே அவரது அடுத்த கட்ட பணிகள் இருக்கும் என அவரது கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.