சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, பழைய ஓய்வூதியம், 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல், மறைமலை நகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர்.
தமிழ்க சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகிறது.
முன்னதாக கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட அமல்படுத்துவது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பினார். இதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் நலனில் முதலமைச்சர் அக்கரையோடு உள்ளார். அரசு ஊழியர்களின் நலன் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு உள்ளோம். பழைய ஓய்வூதியம் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
மறைமலை நகர் பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் கூறிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மறைமலை நகர் பகுதிகளில் 33 நீர் நிலைகள் உள்ளது. இந்தப் பகுதிகளில் தற்போது, 2.20 எம்எல்டி கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. ரூ.37 கோடி செலவில் 15.92 எம்எல்டி கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்துள்ளார்.ஹ
அதைத்தொடர்ந்து தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் பதில் கூறிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் தற்போது வரை 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளுக்கு முன்பு மரங்கள் நடவும் மேற்கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், ரேசன் கடைகளுக்கு பெண்கள் அதிக அளவில் வருவதால் ரேஷன் கடைகளுக்கு முன்பு மரம் நடவும் நிரந்தர மேற்கூரை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கூறினார்.