சென்னை:  போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக  காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் கோயம்பேட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி்  இன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டம் நடைபெறும் என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் அறிவித்திருந்த நிலையில், இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பல மாற்றுத்திறாளிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள கோயம்பேரு நோக்கி வந்த நிலையில், அவர்களை வழியிலேயே காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

மாதாந்திர உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கோட்டையை முற்றுகையிட மாற்றுத்திறனாளிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்கள் கோட்டைரயை நோக்கி வர காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று காலை  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்றபோது, காவல்துறையினருக்கும்  மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பலர்  போராட்டத்தை கைவிட மறுத்தும், அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக  கைது செய்தனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அரசு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் இன்று பேரவையில் எதிரொலித்தது. இதுகுறித்து பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்,   மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றும்,  . மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் அரசாக திமுக அரசு உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் அதிக மாற்றுத்திறனாளிகளை சேர்த்தது தமிழ்நாடுதான் என கூறினார்.