வீடு கட்ட அனுமதி அளிப்பதற்காக பணம் வாங்கிய விவகாரத்தில், அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை அண்ணாநகரில் போலீஸ்காரராக இருப்பவர் சுந்தரலிங்கம். இவர், ஊமச்சிகுளம் அருகேயுள்ள ஆலாத்தூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக அனுமதி கேட்டு ஊராட்சியில் விண்ணப்பம் செய்துள்ளார். வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.12 ஆயிரம் கேட்டு ஊராட்சி செயலர் சுந்தரபாண்டி நிர்பந்தம் செய்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரலிங்கம், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி,லஞ்ச பணத்தை கொடுத்தார். இதனை வாங்கிய சுந்தரபாண்டியை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.