சென்னை;  அறநிலையத்துறையின்கீழ் உள்ள கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தின்போது மணமக்களுக்கு புத்தாடை உள்பட சலுகைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

2021 2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின்போது,  தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களால் “மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும்,மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்” என்ற அறிவித்தார். அதைத்தொடர்ந்து, தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி,  இதனைத் தொடர்ந்து,  இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் அனைத்து திருக்கோயில்களிலும் மாற்றுத்திறனாளி களுக்கு திருமணம் நடைபெற்றால் அதற்கான கட்டணம் வசூலிக்கக்கூடாது. பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்

“திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையின்றி திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும்” என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.  இதுதொடர்பாக  அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டு  உள்ளது.