சென்னை:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இதனையடுத்து 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என அதில் தனபால் உத்தரவிட்டுள்ளார்.