சென்னை:
ஏஆர் ரகுமானுக்கு நோட்டீஸ்அனுப்பியது ஏன்? என்று ஜிஎஸ்டி கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ் டி கமிஷனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசின் ஜிஎஸ்டி கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனுவில், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றும், ரகுமானை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.