சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

 நாடு முழுவதும் சமீப காலமாக இன்புளுயன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழ்நாட்டில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சலையடுத்து, புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரி மாநிலத்தில்எ 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சலைத் தடுக்கும் வகையில் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மார்ச் 16 முதல் 26ஆம் தேதி வரை இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழல் ஏற்படவில்லை என்றவர்,  பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றார்.

மேலும்,  மிழகத்தில் இளம் வயதில் மாரடைப்பால் இளைஞர்கள் மரணம் அடைவது குறித்து இருதய வல்லுநர்களிடம் ஆராய்ச்சி செய்ய அறிவுறுத்தி உள்ளோம் எனக் கூறியுள்ளார்.