சென்னை,

மிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக ஆட்சியை இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு யாரும் கலைக்க முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கூறி உள்ளார்.

ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கூறும்போது, ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குதான் ஆபத்து என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய சாமி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ஆட்சியை இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு யாரும் கலைக்க முடியாது என்று கூறினார்.

மேலும், நீட் விவகாரத்தினை பொறுத்த வரை தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறிய சாமி, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகள் யாரையும் விடுவிக்கக் கூடாது , அவர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட மரண தண்டனையானது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவர் ஏற்கனவே   தமிழகத்தில் அதிமுகவில் ஒரே ஒரு அணி மட்டுமே உள்ளது. அது சசிகலா அணி மட்டுமே என்று அதிரடியாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.