சென்னை:
20 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சியை யாரும் அசைத்து பார்க்க முடியாது என்று அமைச்சர் ராஜக்கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை நங்கநல்லூரில் புதிய வழித்தடத்திற்கான போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு போக்குவரத்து கழகங்களில் வருமானமின்றி நிறுத்தப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் 20 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சியை யாரும் அசைத்து பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.