Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இனி முன்ஜாமீன் கிடையாது! நீதிபதி கறார்..

Sep 2, 2020

சென்னை: மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் சிக்குபவர்களுக்கு, இனி முன்ஜாமீன் வழங்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதி மன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மணல்கொள்ளை அமோகமாக நடைபெற்று வருகிறது. அரசே மணல் விற்பனையை நடத்தினாலும், முறைகேடாக மணல்கொள்ளை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், மணல் கடத்தல் வழக்கில் சிக்குபவர்கள், ஜாமின் கோரினால், குறிப்பிட்ட  அளவிலான தொகை  மாவட்ட நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப் பட்டு உள்ளது. ஆனாலும், மணல் கடத்தல், மணல் கொள்ளை குறைந்தபாடில்லை.

இந்த  நிலையில் மணல்கொள்ளை வழக்கு தொடர்பனா விசாரணை,  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 15 பேர் முன்ன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்தநீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு எளிதாக முன்ஜாமீன் கிடைக்கிறது. அதனால் மணல் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கனிம வளமே  இல்லாமல் போய் விடும். குடிதண்ணீருக்கு அடுத்த தலைமுறையினர் திண்டாட வேண்டியது வரும் என்று கூறினார்.

மேலும், இதுபோன்ற வழக்குகளில்,  முன்ஜாமீன் நிபந்தனையாக ரூ.25 ஆயிரம் விதித்தால், அதை செலுத்த இவர்களைப்போன்ற மணல் கடத்தல் கும்பல் தயங்குவதில்லை. அத்துடன், சிறைக்குள் போகாமல் முன்ஜாமீன் கிடைப்பதால் பலர் தைரியமாக கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனவே இனி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும், மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோர்  சில காலம் சிறையில் இருந்தால் தான் பயம் வரும். கடத்தல் குறையும். இயற்கை பாதுகாக்கப்படும்” என்று கருத்து தெரிவித்தார்.

Post navigation

சென்னையில் 4,648 ரவுடிகள்… களையெடுக்குமா காவல்துறை!
7ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! எடப்பாடி  பழனிசாமி அறிவிப்பு

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer