சென்னை: புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என மருத்துவ நிபுணர் ராமசுப்ரமணியன், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு  பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார். அதுபோல, புதிய வகை கொரோனா குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என கொரோனா தொற்று அனலிஸ்ட்டும் தெரிவித்து உள்ளார்.

சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் BF.7 என்ற உருமாறிய கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது கடந்த ஒரு வாரத்தில் 1.48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் குஜாராத்தில் இருவர், ஒடிசாவில் ஒருவருக்கு BF.7 புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

புதிய வகை கரோனா வைரஸ் (BF.7) பரவல் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், அறிகுறி இருந்தால் தனிப்படுத்த வேண்டும் என்றும் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என  கூறியுள்ள மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசி எடுக்காதவர்களே பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்றும், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பயப்படத் தேவையில்லை என்றும்  தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக விளக்கிய மருத்துவ நிபுணர் ராம் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், புதிய வகை கொரோனவால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. வழக்கமான கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றினாலே புதிய வகை பரவலை தடுத்துவிடலாம். தடுப்பூசி செலுத்திவர்களுக்கு புதிய வகை கொரோனா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டியது அவசியம். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய வகை கொரோனா பரவும் நாடுகளில் இருந்து சென்னை வருவோரை கண்டறிந்து அவர்களை பரிசோதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், புதியவகை கொரோனா குறித்து வாட்ஸ்அப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். உறுதியான செய்தி களை மட்டும் அறிந்து செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் உருமாறிக்கொண்டே இருந்தாலும் அடுத்தடுத்த அலைகளில் அதன் தாக்கம் குறைந்து கொண்டே இருக்கும். அதிக பேருக்கு தொற்று ஏற்பட்டாலும் பதிவு குறைவாக தான் உள்ளது எனவும் மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.

சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் மாறுபாடு வைரசால் இந்தியா உள்பட பிற நாடுகள் பீதியடைய வேண்டாம்! கொரோனா அனலிஸ்ட் தகவல்..