தற்போது ஊரடங்கு தளர்வுகளால் சின்னத்திரை படப்பிடிப்பு எந்தவித இடைஞ்சலுமின்றி சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சன் தொலைக்காட்சி தங்களுடைய சீரியல்களின் நேரம் குறித்து தனது ட்விட்டர் பதிவில் இரவு 7:00 -8:00 ‘ரோஜா’, 8:00 – 8:30 ‘கல்யாண வீடு’, 8:30 – 9:00 ‘கண்மணி’ மற்றும் 9:00 – 10:00 ‘நாயகி’ ஆகியவை ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் வழக்கமாக 9 மணியளவில் ஒளிபரப்பாகும் ‘சித்தி 2’ சீரியலின் பெயர் இதில் இடம்பெறவில்லை.இதனால் சித்தி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர் .
அதற்கு ‘சித்தி 2’ சீரியல் தொடங்கும்போது இரவு 9:30 மணிக்குதான் ஒளிபரப்பானது. பின்பு 9:00 மணிக்கு ஒளிபரப்பு என்று மாறியது. தற்போது மீண்டும் வழக்கமான 9:30 மணிக்கே ஒளிபரப்பாகவுள்ளது. எந்தவிதக் குழப்பமும் அடையத் தேவையில்லை . கஸ்ட் 3-ம் தேதி முதல் இரவு 9:30 மணியளவில் ஒளிபரப்பாகும்” என சித்தி குழு தெரிவித்துள்ளது .