சென்னை: வருமானவரி சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப் படவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் அவருக்கு  சொந்தமான வீடுகள், அலுவலகம், 2 பொறியியல் கல்லூரிகள், 2 அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகள்,  பட்டயக் கல்லூரி, பள்ளி என மொத்தம் 20 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று சோதனை செய்தனா்.

நேற்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருமான வரி சோதனையால் திமுகவின் வெற்றி எந்தவிதத்திலும் பாதிக்காது. தோல்வி பயம், அரசியல் உள்நோக்கத்துடன் வருமானவரி சோதனை நடத்துகிறார்கள்.

வருமானவரி சோதனையில் எந்த ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்படவில்லை என்று கூறினார்.