சென்னை: திருநள்ளார் தொகுதியை சேர்ந்த அமமுக வேட்பாளர் தர்பாரண்யம் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் இன்று பாஜகவில் தம்மை இணைத்து கொண்டார்.

சட்டசபை தேர்தல் நடைபெற குறுகிய நாட்களே உள்ளது. ஆகையால்  அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அவரவர் தொகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலை அடுத்த திருநள்ளார் தொகுதி அமமுக வேட்பாளர் தர்பாரண்யம் பாஜகவில் இன்று இணைந்தார். மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் முன்னிலையில் அவர் இன்று தம்மை பாஜகவில் இணைத்து கொண்டார்.

அதேபோன்று திமுகவிலிருந்து விலகிய விழுப்புரம் மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ஜி.சம்பத் சென்னையில் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.