கடலூர்: என்எல்சி கொதிகலன் வெடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2வது அனல் மின் நிலையத்தில் கடந்த 1ம் தேதி 5-வது அலகிலுள்ள கொதிகலன்  வெடித்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 17 பேர்  தீக்காயங்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் துணை தலைமை பொறியாளர் சிவக்குமார், இன்ட்கோசெர்வ் தொழிலாளி செல்வராஜ், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், நிரந்தர தொழிலாளி வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் ஜோதி ராமலிங்கம், இன்ட்கோசெர்வின் மற்றொரு தொழிலாளி இளங்கோவன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் முதுநிலை தொழில் நுட்ப பணியாளர் சுரேஷ் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதன் மூலம் என்எல்சி கொதிகலன்  விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து இருக்கிறது.