நெய்வேலி

நெய்வேலி என் எல் சி அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்த விபத்தில் 14 பேர் உயிர்  இழந்துள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில்  நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர்.

அத்துடன் 17 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பிறகு மேலும் 7 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 13 ஆக இருந்தது.

இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் என்பவர் உயிர்  இழந்துள்ளார்.

இதனால் நெய்வேலி கொதிகலன் வெடிப்பு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.