பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக நிதிஷ் குமார் இன்று அறிவித்தார்.

இதன்மூலம் பீகார் அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பமான சூழல் முடிவுக்கு வந்துள்ளது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ் குமார் ஆர்.ஜெ.டி., காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளார்.

அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பீகாரின் இடைக்கால முதலமைச்சராக தொடர ஆளுநர் கேட்டுக்கொண்ட நிலையில் நிதிஷ் குமாரை மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவரை அழைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இதனால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பீகார் தலைநகர் பாட்னாவில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ள பாஜக தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளது.

பீகாரின் நிரந்தர முதல்வராக நீடிக்கும் கனவில் நிதிஷ் குமார்… ஆர்.ஜெ.டி. கூட்டணியை முறித்து பாஜக-வுடன் கூட்டணி அமைக்க திட்டம்…