நெய்வேலி:
நெய்வேலி நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 4 லாரிகளுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

யின் மேலக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் சாலை சென்று கொண்டிருந்த போது, ஜெயங்கொண்டம் சிமென்ட் ஆலைக்கு சாம்பல் ஏற்றி சென்ற லாரி இவர் மீது மோதியது. இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியில் வசித்த வந்த மக்கள், நிலக்கரி சுரங்கம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த நான்கு லாரிகளுக் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை சேர்ந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைந்தனர்.

மேலும், லாரிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.