சென்னை

காங்கிரஸ் = திமுக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற உள்ளது

மிக விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக சார்பில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த எம் பி டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29-ந்தேதி காங்கிரசின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.  அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக தலைமை அலுவலகத்தில் முதல் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் 15 தொகுதிகள் வரையில் கேட்டதாக கூறப்பட்டது. திமுக 10-க்கும் குறைவான தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. காங்கிரஸ் நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளையே கேட்டுப்பெற வேண்டுமெனப் பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இன்று) 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திம்க மற்றும்  காங்கிரஸ் திட்டமிட்டிருந்தன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் சனிக்கிழமை (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதானால், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அடுத்த வாரத்தில் நடத்த 2 கட்சிகளும் திட்டமிட்டுள்ளது. இந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் குறைந்தபட்சம் 12 தொகுதிகள் வரை கேட்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.