டில்லி

டுத்த மாதம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வர உள்ளார்.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் அட்டவணையை வெளியிடத் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சியிலும் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காகத் தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த அடுத்த மாதம் (பிப்ரவரி) 13 ஆம் தேதி அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வருகிறார். அப்போது கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார்.