சென்னை

மைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி கருணாநிதி சிலையைத் திறந்து வைத்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதியின் சிலை திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைக்கப்பட்டுள்ளது.  இன்று அந்த சிலையை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

அமைச்சர் உதயநிதி இது குறித்து எக்ஸ் தளத்தில்,

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 100 நாட்களுக்கு 100 நிகழ்ச்சிகளென நாள்தோறும் மக்கள் பயனடையும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

75 நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், 76-வது நிகழ்ச்சியாகத் திருச்சி டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளான இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தோம்.

தி.மு.கழகம், தேர்தல் அரசியலில் ஈடுபட பெரும்பான்மையான கழக உடன்பிறப்புகள் ஆதரவளித்த தீரர் கோட்டமாம் திருச்சியில், கலைஞர் அவர்களுக்கு திருவுருவச்சிலையை திறந்து வைத்ததோடு, 2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 என மாபெரும் வெற்றியைப் பெற்றிட அயராத உழைக்க உறுதியேற்றோம்”

என்று பதிவிட்டுள்ளார்,