சென்னை: கோவில்களில் புத்தாண்டு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவத்தொடங்கி உள்ளது. குறிப்பாக சென்னையில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆனால், வழிபாட்டுத்தலங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்பட வில்லை.

இந்த நிலையில், கோவில்களில் புத்தாண்டு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபடலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். , கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.