அடுத்தடுத்து கிடைத்த சிசுக்கள்.. தகாத வழிக்கர்ப்பமா என விசாரணை..

மாதிரி புகைப்படம்

சென்னை பெரம்பூர் ராகவா சாலையிலுள்ள ஓர் குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தையின் உடல் கிடப்பதாக அவ்வழியே செல்வோர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்குச் சென்று பார்த்த போது ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட ஐந்து மாத சிசுவின் உடல் கிடந்துள்ளது.   சிசுவின் உடலைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக எடுத்து வந்துள்ளனர்.

“ஏற்கெனவே அந்த சிசுவின் உடல் நாய்களால் குதறப்பட்டு அழுகிய நிலையில் இருந்ததால் அது ஆண் குழந்தை என்பது தவிர வேறு ஏதும் அடையாளங்கள் கிடைக்கவில்லை.   அருகே மருத்துவமனை ஏதுமில்லாததால் மேற்கொண்டு விபரங்கள் அறிய முடியாத சூழலில் இந்த குழந்தை யாருடையது என்பது பற்றியும் மற்றும் இறந்த விதம் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்கின்றனர் திரு.வி.க. நகர் காவல்துறையினர்

இதே போல இன்னொரு சம்பவமாகக் குரோம்பேட்டையிலும் ஒரு குப்பைத்தொட்டியில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் தெரு நாய்களால் கடித்துக்குதறப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.

இந்த இரண்டுமே நிகழ்வுகளுமே கருக்கலைப்பு முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் காவல்துறையினர்.

– லட்சுமி பிரியா